

டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதீன் கிச்லூ இருவரும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள். இவர்களை மாவட்ட நீதிபதி அழைத்ததாகச் சொல்லப் பட்டது. பிறகு இருவரும் காணாமல் போயினர். தலைவர்களைத தேடி அலுத்தத் தொண்டர்கள் மாவட்ட நீதிபதியைப் பார்க்க நேரில் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களை இராணுவம் வழி மறித்து, கட்டுகடங்காமல் போனதால் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆத்திரமடைந்த் கூட்டத்தினர் கடைகள், அமிர்தசரஸ் நேஷனல் பேங்க், போஸ்ட் ஆபீஸ் அனைத்தையும் தீயிற்கு இரையாக்கினர்.
லாகோருக்கும் கிளர்ச்சிப் பரவியது.
இந்த அடக்குமுறையைக் கண்டிக்க அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலா பாக் எனும் இடத்தில் கூட்டம் ஏற்ப்பாடு ஆனது.
இதில் ஜெனரல் டயர் தலைமையிலான ஆங்கிலேயப் படை கண்மூடித்தனமாக சுட்டதில் நானூறுக்கும் மேற்ப்பட்ட இந்தியர்கள் இறந்தனர். இரண்டாயிரம் பேர் படு காயம் அடைந்தனர். அங்குள்ள பெரும் கிணற்றில் விழுந்து இறந்தவர்களே நூற்றுக்கணக்கானவர்கள்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
என இன்றும் சுதந்திர வேள்வியின் அனுபவத்தைச் சுமந்துக் கொண்டே நினைவாய் நிற்கிறது ஜாலியன் வாலா பாக்.







