Wednesday, July 15, 2009
பதேபூர் சிக்ரி ( வெற்றித் தலை நகரம்)
பதேபூர் சிக்ரி அக்பர் ராஜபுத் அரசன் ரானா சங்காவைத் வீழ்த்தியதன் அடையாளமாககட்டப்பட்டது . அக்பரின் தலைநகரமாக பதினாறு ஆண்டுகள் இருந்தது. அவருடைய மகன் ஜகாங்கீர் இங்குதான் பிறந்தார். திவானி ஆம் என்ற பொது மக்களை சந்திந்கும் இடமும், திவானி காஸ் என்ற ஆலோசனை கூடமும், புகழ்மிக்க பீர்பால் கதைகளில் வரும் அக்பரின் தலைமை அமைச்சர் மற்றும் நவ ரத்தினங்களில் ஒருவரான பீர்பால் அரண்மனை இங்கு உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் மிக உயரமான என்ற பெயரைக்கொண்ட புலண்டர்வாசா (பெரிய வாசல் ) பதேபூர் சிக்ரிஇல் அமைந்து உள்ளது. மகான் சலீம் சிஷ்டி (அக்பரின் ஞான குரு) இருக்கும் வரை சிக்ரியிலேயே இருந்த அக்பர் , அவரது மறைவுக்குப பின்னர் தலை நகரை ஆக்ராவிற்கு மாற்றினார். இன்றும் சிக்ரி கிராமம் அக்பரின் வெற்றியைத் தாங்கிக் கொண்டு பதேபூர் சிக்ரி என்ற வெற்றித் தலை நகராக விளங்கி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment