Friday, January 8, 2010

படித்ததில் பிடித்தது - கலாம் காலங்கள் - PM நாயர்







நூலாசிரியர் PM நாயர் 2002 லிருந்து 2007 வரை ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் செயலாளராக பணியாற்றியவர். பாண்டிசேரியின் தலைமைச செயலாளர் ஆகவும் இருந்தவர்.

எந்த ஒரு பெரிய மனிதரும் தன்னுடைய செயலாளருக்கு நாயகனாக இருக்க முடியாது என்பதை தகர்த்து அவரைப் புகழுந்து "கலாம் காலங்கள்"எழுதியுள்ளார் நாயர்.

இனி கலாம் அவர்களின் சாதனைக் காலம். நாயர் வார்த்தைகளில் ....

1 "மிஸ்டர் நாயர்" என்று செயலாளரை அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

2 ஒரு நாளைக்கு 70 முதல் 100 வரை கடிதங்களை விவாதிப்பதற்காக குறிக்கப்பட்டு இருக்கும்.
3 புத்தக விமர்சனங்கள் பக்க வாரியாக கூறக்கூடியவர்.

4 லட்சத் தீவுகளைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் , கிராமத்திற்கும் தனது பதவிக் காலத்தில் பயணம் செய்தவர்.

5 உலகின் உயரமானப் போர்ப் பகுதியான சீயாசின் சென்றது, விசாகப்பட்டனத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் சாகசம் , சூப்பர்சொனிக் SQ30
போர் விமானம் 15 நிமிடங்கள் ஒட்டிய முதல் ஜனாதிபதி என்றப் பெருமைகளைப் பெற்ற ஒரே ஜனாதிபதியாக திகழ்கிறார் .

6 மே 2006 இல் தனது அண்ணன், கொள்ளுப் பேரன் மற்றும் 52 உறவினர்கள்
டெல்லி சுற்றுலா மற்றும் அஜ்மெர் ஷெரிப் சென்று வர அலுவலகத்திற்கான வாகனங்கள் ஒரு முறைக் கூடப் பயன்படுத்தப் படவில்லை, அறை ,தேனீர் பயன்பாடு செலவுகளை தனது சொந்தப் பணத்தில் செலுத்தினர். 3.52 லட்சம் செலுத்தியதை விளம்பரப் படுத்தக் கூட இல்லை.

7 இப்தார் விருந்து ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஆக்கும் செலவு 2.5 லட்சங்களை ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, போர்வை, குளிர்கால உடைகள் எனக் கொடுத்ததோடு தன பங்காக 1 லட்சத்தையும் கொடுத்தார்
குடியரசுத் தலைவரின் மாளிகை பரந்து விரிந்தது (329 ஏக்கர் ) என்பது அனைவரும் அறிந்ததே

அது

குடியரசுத் தலைவரின் மனது போல்

என்பதை PM நாயர் கலாம் காலங்களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.












No comments:

Post a Comment